Friday, February 12, 2010

வானம் வசப்படும்!

வானம் வசப்படும்!
* வெளிச்சம் இல்லை என்று 
இரவுகள் எப்போதும் இரக்கப்படுவதில்லை!

* ஆயிரம் மின்மினிப் பூச்சுகள் 
இரவில் ஒன்று கூடினாலும் 
பகலில் பறக்கும் பட்டாம் பூச்சிகளுக்கு இணையாகுமா?


* மனித மனமே...
இருட்டறைக்குள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு
சூரியன் கண்ணுக்குத் தெரியவில்லை என்று 
அஞ்ஞானம் பேசித் திரிவதில் தான் 
உனக்கு ஞானம் என்பதா?


* சுழன்று வீசும் காற்றை முதலில் 
அனுபவித்துப் பார் அப்போது தான் 
தென்றலின் அருமை உனக்குப் புரியும்!

* கடுங்குளிரில் நடுங்கும் போது
ஆபத்தான நெருப்பு அப்போது இதமாகத் தெரியும். 
புகழ்ச்சியும், இகழ்ச்சியும் நெருப்பும், குளிரும் போல...


* பாதையெங்கும் மலர்கள் இருந்தால் பாதங்களுக்கு வலிமை இருக்காது. 
கூழாங்கற்களும் சிறு, சிறு முட்களும் பதம் பார்த்தால்தான் 
பாதங்களும் கவனமாய் பாதை பார்த்து நடக்கும்!

* வேதனை கொள்ளும் மனம் தான் 
சாதனை பதியம் போடுகிறது. 
முள் இல்லாத ரோஜா செடிகள் 
எங்கேனும் முளைக்கிறதா?

* தேசிங்கு ராஜா என்றாலும் போர்முரசு 
கொட்டி விட்டால் வாளெடுத்து தானே தீர வேண்டும். 
வாழ்க்கை என்று வந்து விட்டால் வளைந்து பார்த்து 
வாழ்ந்து தானே ஆக வேண்டும்!

* வளைந்து செல்லும் நதிகளைப் போல
வாழ்விலும் தாழ்ந்து சென்றால் 
நட்பும், உறவுகளும் வாழ்த்திடுமே!

* பாதி மெய்யும், பாதி பொய்யும் கவிதைக்கு அழகு தான்... 
இன்பம் பாதி, துன்பம் பாதி வாழ்க்கைக்கு தேவை தான்!

* சோதனை முடிச்சுகள் அவிழ்ப்பதில் 
தான் வாழ்க்கையின் சூட்சமம்... 
சோதனையை எதிர் கொள்பவன் சாதனைப்
படிக்கட்டில் ஏறிப் போகிறான்...

* வாழ்க்கை அழகிய பூந்தோட்டம். 
அதில் நம்பிக்கை விதையை விதைப்பவன்
வசந்த வாசலை திறப்பு விழா செய்கிறான். 
அப்போது, வானமும் வசப்படும்!

தேங்க்ஸ் டு...
எம்.அமிர்தராஜன் & தினமலர்

No comments:

Post a Comment